Posts

பிரார்த்தனை என்பது என்ன?

 பிரார்த்தனை என்பது என்ன? பொதுவாக பிரார்த்திக்கும் காலத்தில் இறைவா எமக்கு இதைக் கொடு அதைக் கொடு அனைத்தும் வேண்டும் இது வேண்டாம் என்பதே பிரார்த்தனையாக இருக்கின்றது. இவ்விதம் இல்லாமல் இறைவா எமக்கு எது நலம் தருமோ அதையே நடத்தி வைப்பாய் என்பதே சிறப்பான பிரார்த்தனை ஆகும். இதைப் பலரும் மறந்துவிட்டு நித்யம் (எப்பொழுதும்) மேலும் சிறிது சிறப்பாக ஆண்டவா எமக்கு இதைச் செய் நான் உனக்கு அதைச் செய்கிறேன் என்று கூறுகின்றனர். இது மாபெரும் தவறாகும்.  ஏனெனில் இறை சக்திக்கு நாம் அளிப்பது எதுவும் தேவையற்றது. ஏன் என சிந்தித்தால் இவ்வுடலில் நம் ஆத்மாவை அடைத்து வைப்பதே அவன் அருள்தான் என்பதை உணர வேண்டும். இவ்வுடலிலிருந்து நமது ஆத்மாவானது பிரிந்து நல்ல நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் அவனருள் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஆண்டவனிடம் எமக்கு எது நலம் தருவதோ அதனை அளிப்பாய் என்று மட்டும் வேண்டுதலே சிறந்ததாகும்.

ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன

 “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?” ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களிடம் “ஏன் வாகனங்களில் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன?” என்று கேட்டதற்கு, பல வகையான மாறுபட்ட பதில்கள் கிடைத்தன. 1. "நிறுத்துவதற்கு" 2. “வேகத்தைக் குறைப்பதற்கு" 3. “மோதலைத் தவிர்ப்பதற்கு " 4. "மெதுவாக செல்வதற்கு" 5. "சராசரி வேகத்தில் செல்வதற்கு" என பல்வேறு பதில்கள் மாணவர்களிடமிருந்து வந்தது. “வேகமாக ஓட்டுவதற்கு"  என்ற பதிலை சொன்ன மாணவனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரித்தனர். ஆனால் அந்த பதிலே சிறந்த பதிலாக ஆசிரியரால் தெரிவு செய்யப்பட்டது. ஆம்,  பிரேக்குகள் நாம் வேகமாக செல்வதற்காகத் தான் வைக்கப்பட்டுள்ளன. உங்கள் காரில் பிரேக்குகள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் உங்கள் காரை எவ்வளவு வேகமாக ஓட்டுவீர்கள்?  நிச்சயமாக உங்களால் வேகமாக ஓட்டமுடியாது. பிரேக்குகள் இருப்பதனால் மட்டுமே நாம் விரும்பும் இடத்திற்கு வேகமாக செல்வதற்கான தைரியத்தை கொடுக்கிறது. இதுபோலத் தான் தடைகள்.  தடைகள் வரும் போது அவைகள் நம் வாழ்க்கையின் வேகத்தை குறைக்க வந்ததாக நினைத்து நம் மன...

தடைகள் படிக்கட்டுகளாகட்டும்

தடைகள் படிக்கட்டுகளாகட்டும் உற்சாகமாக விரைந்து செல்லும் எறும்புகளைக் கவனியுங்கள்.அதில் ஒரு எறும்பின் பாதையில் சும்மா விரலை வைத்து மறித்துப் பாருங்கள். அது நின்று விடாது. விரலைச் சுற்றி வரும். எங்கே வழி இருக்கிறது என்று நாலா பக்கமும் தேடும். எத்தனைத் தடைகள் போட்டாலும் எப்படியாவது  தன் பயணத்தைத் தொடரும். செத்து விழும் வரை அது தன் உற்சாகத்தை இழப்பது இல்லை; நம்பிக்கையை விட்டுக் கொடுப்பதும் இல்லை. சிறு புல்லைப் பறித்து அதன் வேர்களைப் பாருங்கள். என்னவொரு உற்சாகத்துடன் பூமியில் உள்ளே ஆழமாகக் கிளை விட்டு அவை ஊன்றிக் கொண்டு இருக்கின்றன என்று புரியும். உலகில் வாழும் எல்லா உயிர்ச் சக்திக்கும் சலிப்பு என்பதே இல்லை. மனிதராகிய நம் குறுகிய மனதில் தான் சலிப்பும், எரிச்சலும், அவநம்பிக்கையின்மையும் ஊற்று எடுக்கின்றன. வாழ்க்கை என்பதே உற்சாகமாய் வாழத்தானே..? எந்த முடிவைக் கண்டும் தோல்வி என எதற்காக எரிச்சல் கொள்ள வேண்டும்.?முதலில் நாம் சந்தித்தது தோல்வி அல்ல. ஆனால், அதை நினைத்து உற்சாகமின்றி வேதனையும், எரிச்சலுமாக இருப்பது நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ள  வழி வகுக்கும்., ஆம் நண்பர்களே  நம் நோ...

எதிர்மறை, எண்ணங்களை... (Negative Thoughts) களைவது, எப்படி?

*🙏🤘 எதிர்மறை, எண்ணங்களை... (Negative Thoughts) களைவது, எப்படி?* 🍁 எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன். எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக்கொண்டே வருவதைப்போன்றது. நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு. எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க 10 விஷயங்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன். *1. தியானம்*  தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதி...

What's the number behind?

Image

மன அழுத்தத்தை குறைக்க 10 எளிய வழிகள்

*மன அழுத்தத்தை குறைக்க 10 எளிய வழிகள்* 1 - *Have a laugh* ஒவ்வொரு முறை நாம் சத்தமாக சிரிக்கும் போது, அதிகப்படியான ஆக்சிஜன் நம் உடல் உறுப்புகளுக்கு சென்று வரும். இதனால் ரத்த ஓட்டம் அதிகமாகி, மன அழுத்தம் தானாகவே குறைந்துவிடும். 2.*Spend time with your pet* நம் வீட்டில் உள்ள விலங்குகளுடன் நேரம் செலவிடும் போது, நம் உடலில் இருந்து நல்ல ஹார்மோன்களான செரடோனின் மற்றும் ப்ரோலேக்டின் ஆகியவை சீராக வெளியேறுகின்றன. இவை மன அழுத்தம் ஏற்படும் சூழலை குறைக்கின்றன. 3.*Get rid of the clutter* நாம் வசிக்கும் இடங்களை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். அதேபோல் சுற்றி இருக்கும் பொருட்களை ஒழுங்காக பராமரித்து வைத்திருக்க வேண்டும். 4.*Do the housework* வீட்டில் இருக்கும் போது, உங்களுக்கு பிடித்தமான இசை அல்லது டிவி நிகழ்ச்சியை ஒளிபரப்பிக் கொள்ளவும். இதையடுத்து வீட்டில் செய்ய வேண்டிய நமக்கு பிடித்தமான வேலைகளை செய்யலாம். அவ்வாறு செய்யும் போது, உடலில் உள்ள கலோரிகள் எரிவதுடன், சோர்வடையாமல் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும். 5.*Drink juices* ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதன் மூலம் மன அழுத்தத்தை வெகுவாக குறைத்து, உடலை திறம்பட செய...

Eye test

Image